Friday, 18 May 2012

மாற்றங்கள்...!



பிரகாரம் நுழைந்தவுடன்
கனியாகி விடுகிறது எலுமிச்சை...
தீர்த்தமாகி விடுகிறது தண்ணீர்...
பிரசாதமாகி விடுகிறது
திருநீரும் பொட்டும்...
 எந்த மாற்றமுமின்றி
வெளியேறுகிறான் பக்தன்.
 -புன்னகை சேது-


விற்ற காசு

தோப்பும் துரவும் வீடும் கிணறும் 
விற்று வாங்கிய தொகையை 
எண்ணிக்கொண்டிருக்கையில்
ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கள்
அனைத்திலும் அப்பாவின் முகம்.
-ந.கண்ணன்- 
 (17.11.2002 அன்று விகடனில் வெளியாகிய இரு கவிதைகள்)

No comments:

Post a Comment