பிரகாரம் நுழைந்தவுடன்
கனியாகி விடுகிறது எலுமிச்சை...
தீர்த்தமாகி விடுகிறது தண்ணீர்...
பிரசாதமாகி விடுகிறது
திருநீரும் பொட்டும்...
எந்த மாற்றமுமின்றி
வெளியேறுகிறான் பக்தன்.
-புன்னகை சேது-
விற்ற காசு
தோப்பும் துரவும் வீடும் கிணறும்
விற்று வாங்கிய தொகையை
எண்ணிக்கொண்டிருக்கையில்
ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கள்
அனைத்திலும் அப்பாவின் முகம்.
-ந.கண்ணன்-
(17.11.2002 அன்று விகடனில் வெளியாகிய இரு கவிதைகள்)

No comments:
Post a Comment