Thursday, 15 March 2012
என்னுடைய பேரனுக்காய் எவன் வைப்பான் பழத்தோட்டம்?
"யாழ் நகரில் என் பையன்
கொழும்பில் என் பொண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ்நாட்டில் என் அம்மா
சுற்றம் ப்ராங்க்போர்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ வழி தவறி
அலாஸ்கா வந்துவிட்ட
ஒட்டகம் போல் ஒஸ்லோவில்,
என்ன நம் குடும்பங்கள்
காற்றில் விதிக் குரங்கு கிழித்தெறியும்
பஞ்சுத் தலையணையா?
பாட்டனார் பண்படுத்தி
பழமரங்கள் நாட்டி வைத்த
தோப்பை அழிய விட்டு
தொலைதேசம் வந்தவன் நான்
என்னுடைய பேரனுக்காய்
எவன் வைப்பான் பழத்தோட்டம்?"
(நிகழ்கால வாழ்க்கையும் உறுதி இல்லாமல் போவதைப் போல எதிர்காலம் குறித்த நிச்சயமின்மை தொடரும் புலம்பெயர் வாழ்வின் துயரங்களை வெளிப்படுத்தும் ஈழக் கவிஞரான வா.ஐ.ச ஜெயபாலனின் கவிதை)
Subscribe to:
Posts (Atom)
