Wednesday, 5 September 2012

அவன் சாவில் பங்கு கேட்கிறாள் கிழவி! காசி ஆனந்தன் நறுக்குகள்


ஈழத்தின் புகழ் பூத்த கவிஞர்களில் ஒருவர் காசி ஆனந்தன். 

இவரது நறுக்குகள் இரண்டாம் தொகுப்பு என்ற கவிதைப் புத்தகத்தில் இருந்து சில கவிதைகள் உங்களுக்காக... 


பங்கு
எதிரிக்குத் தெரியாமல்
சோறு போடுகிறாள்
கிழவி
போராளிக்கு...

நினைக்கலாம்
நீ
அவனுக்கு
அவள்
உயிரூட்டுவதாய்
இல்லை...

அவன்
சாவில்
பங்கு
கேட்கிறாள்
கிழவி...

கூடு
சொந்த வீடு
கட்டுகிறது
குருவி...

நான்
குடியிருக்கும்
வாடகை வீட்டில்.

உறுத்தல்
நேசிக்கிறேன்
எங்கள் மண்ணின்
பறவைகளை
எங்களிலும் கூடுதலாய்...

எங்கள் மண்ணை நேசிப்பதால்

எதிரி
குண்டு வீச்சில்
எங்கள் காடுகள்
எரிந்தும்
வெளிநாடு நோக்கி
விரியாத சிறகுகள்...