Monday, 22 October 2012

இந்தியாவில்…!



இந்தியாவில்..
நெற்றியில் நீங்கள் திலகமணிந்திருந்தால்
உங்களை யொருவரும் “நீங்கள் தமிழரா” எனக் கேட்பதில்லை.

நீங்கள் அணிந்திருக்கும் “பொட்டு” அவர்களைக் கலவரப்படுத்துவதில்லை.
அவர்களை அது அசௌகரியமடையச் செய்வதில்லை.

கூந்தலில் மலர்களைச் சூடிக்கொள்ளலாம்.
வெண்ரோசா, அலரி, மல்லிகை எதுவும்
வாசம் வீசலாம் உங்கள் கூந்தலில்….

மூக்குத்தியணிந்த பெண்களும்
காதணியணிந்த ஆண்களும்
மூக்கின் நடுவில் துளையிட்டு வளையம் தொங்கினும்
கழிசடைகளல்ல இங்கே.
கால்களில் சலங்கையணிதல் வழமையிங்கே.

இந்தியாவில் மக்கள் அதிர்ச்சியடைவது இவற்றினாலல்ல.
அவர்கள் அதிர்சியடைவது வேறு விடையங்களுக்கு:-
இரண்டு அல்லது மூன்று உள்ளூர் மொழிகளை மக்கள் அறிந்திருப்பது மிகச் சாதாரணமாக 
இருக்கும் ஒரு நாட்டில்
தமிழ்பேசத் தெரியாது என்னை நான் இலங்கையாள் என்ற போது…

பல்லினங்கள் வாழும் நாட்டில் பிறந்து வாழுமெனக்கு
இந்நாட்டின் இரு மொழிகளில் ஒன்று மட்டுமே தெரியும்.
எனக்கு நெற்றியில் திலகமிட முடியும்
கூந்தலில் பூச்சூட முடியும்
காலில் சலங்கை அணியமுடியும்
ஆனால் தமிழ்பேச முடியாது…

மூலம்: சுபா விஜேயஸ்ரீவர்த்தன (SubhaWijesiriwardena)
நன்றி:http://blogsmw.wordpress.com/2012/09/02/in-india/
மொழிபெயர்ப்பு: தேவஅபிரா